4 மார்., 2010

இந்த எழுதுகோல்...




என் எண்ணங்களை
எழுத்தாக்கி
அதை தமிழ்
மொழியாக்கி
எளிய நடையில்
கவிதையாக்கி,
காதல் சொல்ல
வழியாக்கி...


சில வலிகள் 
போக்கவும் 
இந்த எழுதுகோல்
எனக்கு 
விழியாகி போனது.


எனது எழுத்துக்கு 
உயிரானது.
என் வாழ்க்கையில்
எழுதுகோல்
நண்பனாய் 
ஒன்றானது
சுகமானது.


இன்று 
எழுதுகோல்
கணினிக்குள் 
தட்டச்சு கருவிகளாய்
மறுபிறவி எடுத்தாலும் 


கையப்பமிட 
குறிப்புக்களை 
குறித்துக் கொள்ள
மறையாத நிலையில் 
எழுதுகோல் 
என்றும் நம்முடன்.


கைக்கு அடக்கமாய் 
வித வித நிறத்தில் 
விலை உயர்ந்த 
படைப்பில் 
சட்டைக்குள் 
மின்னும் விதத்தில் 
ஒன்றாய் 
இரண்டாய்....



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக