4 மார்., 2010

விழிகளில் மழையாய்!



நீண்ட இடைவெளிக்கு பின் சந்திக்கும்
கணவன் மனைவியின் நிலை இந்த கவிதை!


















ஊமை நாடகம் ஒன்று
பார்வையாலே நடக்குது இங்கு!
மௌனமே ஆசையாய்,
பூக்களின் கவிதையாய்,
அரங்கேற்றம் இன்று.

நான்கு பார்வைகள் கலந்து,
நலம் கேட்க்கும் பார்த்து!
கேட்டதும்...
விழிகளில் மழையாய்,
அந்த துளிகளோ....
ஆசைகளின் மொழியாய்,
மாறிப்போகும் வேலை இது.



கண்களின் சந்திப்பு 
கண்ணீராய்  பிரிவை சொல்லும் 
கண்ணும் கண்ணும், கொள்ளையடித்து 
கதைகள் பல சொல்லும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக