28 பிப்., 2010

மரணத்தில் அடங்கும்!





உலகத்தின் உதயம்
கதிரவனுக்கு உரிமம்.


உண்மையின் உதயம்
தாய்மையில் தொடங்கும்.


அன்பின்   உதயம்
மனதுக்கு புரியும்.

நட்பின் உதயம்
கஷ்டத்தில் அறியும்.

இனிமையின்  உதயம் 
மனைவியிடம் கிடைக்கும்.

தலைமுறையின் உதயம்,
பிள்ளைகளாய் வளரும்.

சந்தோசத்தின் உதயம்,
பேரப்பிள்ளைகளாய் மாறும்.

வாழ்வின் உதயம்
மரணத்தில் அடங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக