14 ஆக., 2012

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: அரசு வழக்கறிஞர் ராஜினாமா



தமிழக முதல்வர் ஜெயலலிதா 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்ற புகாரின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு பல்வேறு தடைகளைத் தாண்டி உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி பெங்களூர் தனிநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். 

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் ஆச்சார்யாவை கடந்த 2005-ம் ஆண்டு உச்சநீதிமன்றமே சிறப்பு வழக்கறிஞராக நியமித்தது. இந்த வழக்கில் ஆச்சார்யாவும் நீதிபதி மல்லிகார்ஜூனையாவும் ஜெயலலிதா தரப்புக்கு தொடர்ந்து சிம்மசொப்பனமாக இருந்து வந்தனர். அதே நேரத்தில் கர்நாடக ஆளும் பாஜகவின் துணையோடு ஆச்சார்யாவை அரசு தலைமை வழக்கறிஞராக்கியும் அகற்றப் பார்த்தனர். ஆனால் ஆச்சார்யா அந்தப் பதவியை ராஜினாம செய்துவிட்டு தொடர்ந்து ஜெயலலிதா வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார்,.

இவ்வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகி வாதாடி வந்த வழக்குறைஞர் ஆச்சார்யா. இவர் திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். மன உளைச்சல் காரணமாக தான் பணியை ராஜினாமா செய்வதாக கர்நாடக மாநில உள்துறை செயலாளருக்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில் ஆச்சார்யா குறிப்பிட்டுள்ளார்.

சொத்துகுவிப்பு வழக்கு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆச்சார்யா ராஜினாமா செய்துள்ளது, அரசியல் மற்றும் நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நன்றி தினசரிகள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக