20 ஜூன், 2012

முதலமைச்சர் கதை சொல்லியிருக்கிறார்: கலைஞர்








இல்லாத ஆடுகளுக்காக பிரச்சனை செய்யக் கூடாது என முதலமைச்சர் கதை சொல்லியிருக்கிறார்: கலைஞர்

திமுக தலைவர் கலைஞர் கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கேள்வி: அ.தி.மு.க. அரசு பதவியேற்றவுடன் பரபரப்பாக அறிவிக்கப்பட்ட விலையில்லா ஆடுகள் திட்டம் நடக்கிறதா?

கலைஞர்: ஓ! நடக்கிறதே! நேற்று கூட அதைப்பற்றி செய்தி வந்திருக்கிறதே; அதன் தலைப்பு என்ன தெரியுமா? “அரசின் விலையில்லா ஆடுகள் கசாப்பு கடையில் விற்பனை” என்பதுதான். இந்தத் தலைப்பின் கீழ் புகைப்படமும் வெளிவந்துள்ளது. அந்தப் புகைப்படத்தின் கீழே, “தேனி மாவட்டம் போடியில், கசாப்பு கடையில் விற்கப்பட்ட, அரசின் விலையில்லா ஆடுகள் காதில் அடையாள நம்பர் முத்திரை உள்ளது” என்று எழுதப்பட்டுள்ளது. முதலமைச்சர் இந்த ஞாபகத்தில்தான் திருவேற்காட்டில் பேசும் போது “இல்லாத ஆடுகளுக்காக பிரச்சினை செய்யக் கூடாது” என்று கதை சொல்லியிருக்கிறார் போலும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக