9 டிச., 2011

ஊழல் ஜாதி சங்கம்.சிரிக்க மட்டும்



தலைவருக்கு என்ன இப்படி கோவம் ?

ஊழல்வாதி என்று சொல்பவர்களை 
வாய் அடைக்க ,ஊழல் ஜாதி சங்கம் 
என்று ஆரம்பிக்க கிளம்பிட்டார்.
ஜாதி சங்கம் உருவானா 
ஜாதியை பற்றி அவதூறா
பேசமுடியாது அல்லவா ?


=============================

நேற்று தலை பேச பேச எல்லோரும் 
கோர்ட்டில் மயக்கம் வந்து விழுந்து 
விட்டார்களாமே ?

ஆமாம் .நீதிபதி உங்கள் மீது 
சுமத்தபட்ட ஊழல் குற்றத்துக்கு 
என்ன பதில் கேட்க...
நம்ம தலைவர் 
ஊழலா ?அது எப்படி இருக்கும் ?
கருப்பா  சிவப்பா ?குட்டையா 
நெட்டையா ?அது என்ன சாதி ?
எந்த மாநிலம் ?அந்த ஊழல் 
வந்து என்மீது குற்றம் சுமத்த 
என்ன தகுதி இருக்கு ?
என்று கேட்க எல்லோருக்கும் 
மயக்கம் வந்து விட்டது...

2 கருத்துகள்: