28 டிச., 2011

மழையின் காதலுக்கு...




மழையின்
காதலுக்கு
எழுதிய கவிதைகள்
தூறலாய் தூறப்பட்டன 

பூமிக் காதலிக்கு!
=============================

இடியின் துணையோடு,
மின்னலில் பூவெடுத்து
பூமிக்காதலிக்கு 
சூட்டப்பட்ட
மாலையே 
இந்த மழை!

========================

மேகத்தின் மோகத்தில்,
மழை காமம் கொள்ள,
கர்ப்பம் தரித்தாள்
பூமிக்காதலி !
தாவர குழந்தைகளை
பெற்று யெடுத்தாள்!


=====================

மழை காதலனுக்கும்
பூமிக்காதலிக்கும்,
சண்டையாம்,
மழையின் அழுகை
வெள்ளமாய் ஓடியது!

============================

பூமியின் மேல் கொண்ட
மழையின் காதலுக்கு,
கறுப்புக்குடை பிடித்து,
எதிர்ப்புத் தெரிவித்து
ஒதிங்கினர்
மனிதர்கள்!
=============================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக