19 அக்., 2011

கண்ணீரும் நமக்கு தேவை!






கண்ணீர் என்பது உன்னை
நீயே சுத்தப்படுத்திக்கொள்ளும்
மருத்துவம்!

கண்ணீர் இறைவன்
தந்த மகத்துவம்!
பெண்களுக்கு இது ஒரு  ஆயுதம்.

பெண்கள் வலிகளோடும்,
அழுகையோடும் தான்,
பிள்ளைகளை பெற வேண்டிவுள்ளது!

நகைக்கும் ,புடவைக்கும்
கண்ணீர் சிந்தியே
கணவனிடம் 
வாங்க வேண்டிவுள்ளது.

கண்ணகி சிந்திய கண்ணீருக்கு
தீ இருந்தது!

சில  கண்ணீருக்கு 
கதைகளும், சரித்திரமுண்டு!

கண்ணீர் வடிப்பது
உனக்கும் நலம் தரும்,
பாரமும் குறையும்.

அழு ,அழு ,மனம் லேசாகும் வரை,
உன் விழிகள் சிந்தட்டும் நீரை.

கரைப் போக்கும் கண்ணீரும் 
நமக்கு தேவை!

2 கருத்துகள்: