20 செப்., 2011

காதலர்கள் என்று சொல்பவர்களே...




இரண்டு நாள் பார்த்து ,
இரண்டு நாளில் சிரித்து,
இரண்டு நாட்களில் ஈர்த்து,
இரண்டு நாட்களில் காதல் கொண்டு,
இரண்டே நாளில் கடிதம் கொடுத்து,
காதலர்கள் என்று சொல்பவர்களே...

பருவம் விதைத்த விதைக்குள்,
தங்களை விதைத்து,
நாங்கள் காதலர்கள் என்று,
விலாசம் சொல்பவர்களே.....


காதல் ஜோதியை ஏற்ற 
இரு வீடுக்குள் விளக்கை 
அணைத்தவர்களே!

கவனம் சிதறிய நிலையில்,
யாருக்காக இந்த ஓட்டம் ?
எங்கள் மனங்களை அறியாத நீங்கள் 
இரண்டே மாதத்தில் 
உங்கள் மனங்களை அறிந்தது எப்படி ?

மதத்தை தாண்டிய பயணமல்ல 
உங்கள் காதல் பயணம்!
காதல் மதம்பிடித்த நிலையில் தான் 
உங்கள் பயணம்!

அறிவு தான் தொடக்கம் 
தெளிவு தான் வாழ்க்கை,
எல்லாம் அறிந்தும் 
தெளிவுல்லை, தேர்வும் சரில்லை 
நீங்களும் ஒரு மன நோயாளியே !

தெளியும் ஒரு நாள் ,அன்று ..
எங்கள் இன்றைய நிலையை 
பெற்றோர்களாய் அறிந்துக்கொள்வீர்கள்!
அது வரை செவிடன் காதில் ஊதிய சங்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக