4 மார்., 2010

போலிச் சாமியார் இவர்!















போலிச் சாமியார் இவர்.
சாமி வேடம் போடுவார்.

மறு அவதாராம் என்பார்.

மதிக்கெட்ட சிலபேர்,

கையெடுத்து வணங்குவார்.

சொல்வதை வேதம் என்றேக்கொள்வார்!

தாரம் இல்லா வாழ்விதனை, சுகம் என சொல்வார்.

தனியே ,தரங்கெட்ட உறவுகளுடன் கூடி மகிழ்வார் .

இதை அறியாமலே சிலர் இவரையைத் நாடிப்போவார்

நினைப்பது எல்லாம் நடக்கணும் என வேண்டிப் போவார் ,

தன்னை வாங்குவதை கண்டு மகிழ்வார்...

கீதை,குரான்,பைபிள்,சொல்லாததையா சொல்வார்!


எல்லா வேதமும் நம் மொழிகளில் இருக்கு!
படித்துவிட்டால் புத்தி தெளியும் உனக்கு!



எட்டுத் திசைகளும் உனக்குளிருக்கு,
இன்னுமா விடியவில்லை கிழக்கு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக