4 மார்., 2010

ஆறிலும் சாவு நூறிலும் சாவு.



பிறந்ததே இறப்பதற்கு   தான்.
இருப்பதே நீ சாதிக்கத்தான்!
உலகம் இருப்பதும் உனக்காகத்தான்.

சாவை கண்டு அஞ்சாதே!
பெண்ணுக்கும்,பொன்னுக்கும் சாகாதே!
மண்ணுக்கும்,இனத்துக்கும் சாகத் தயங்காதே!

வீரத்தோடு உறவாடு
ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
இந்த உறுதியோடு வாழ்ந்து பாரு.

இறந்த பின்னும் புகழோடு,
இருக்கவே...
இறக்கும்  வரை போராடு!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக