6 மார்., 2010

நெறி...!



















கண்டு , காணாமலும்,
போகிறோம்!

நமக்கு ஏன் இந்த வம்பு
என பேசுகிறோம்.

இது எங்கோ நடப்பதாக
நினைக்கிறோம்.

நம்மிடம் வந்தால் மட்டும்
துடிக்கிறோம்.


சமுகத்தில் நாமும்
ஒரு முகம்!

நமக்குள் வேண்டாமா
சின்ன சினம்!

ஒன்றாய் வாழ்ந்தால்
கூடும் பலம் !


புதுத்
துறவத்தை ஏற்காமல்,

அவனிடம்
என்றும் ஏமாறாமல்...

தனி மனிதனுக்கு என்றும்
அடிமையாகாமலும்...

வரும்
காலத்தோடு இணைந்து
நம்
கலாச்சாரத்தை மறக்காமலும்,

கண்ணுக்கு முன்
நடக்கும் அநியாங்களை
கண்டும், காணாமல், இல்லாது

ஒற்றுமை குலைக்கும்
வெறி கூட்டத்தை அழித்து

நன்னெறிக் கூட்டமாய்
ஒன்றாய் வாழுவோம் இங்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக