26 பிப்., 2010

மறப்பது மனிதனின் வர்க்கம்.


நான்
தாயுள்ளம் கொண்டவள்
என் பெயர் மரம்.


நீ மறந்தாய் என்னையே.
உக்கார இடம் தந்தேன்
முக்காலியாய்
நாற்க்காலியாய்...!


உன் வீட்டுக்கு
தென்றல் வர வழித்தந்தேன்,
ஜன்னலாய்.


நீ இளைப்பாற தொட்டிலாய்,
உன் வீட்டுக்கு காவல் காக்க
கதைவுகளாய்...
நீ அமைதி பெற குடையாய்...


கொடையாய்
பயன் தந்த என்னை,
மறந்தாய்!


இன்று நீயும்
ஒரு சுயநலவாதி!
மரத்தை மறந்தாய் 
அனைத்தும் இழந்தாய்!

பயன் தருவது
என் எண்ணம்
அதனை மறப்பது ,மறுப்பது 
மனிதனின் வர்க்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக