12 ஜன., 2012

உனக்குள்ளே இருக்கு!




வாழப் பிறந்தவனே
வாழ்ந்து பார்...
உலகம் பெரியது
உனக்கும் இடமுண்டு
தேடிப்பார்!

தேடலின் 
அருமை தெரியுமா
தேடும் போது 
அறிந்துக்கொள்வாய்

சிறு துளி விந்தியின் 
விடை நீ என்றால்,
தேடலியின் 
மகத்துவம் புரியும்

பிடிபடாமல் போகாது
பிரம்பஞ்சத்தின்
பிம்பம் நீ...

இடியே வந்தாலும் 
துவளாதே
இதுவும் கடந்துபோகும்.
காத்திருந்தால் 
புரிந்துபோகும் 

காதல் மட்டும் 
வாழ்க்கையில்லை
காசு மட்டும் 
உன் இலக்குயில்லை...

உலகில் இன்னுமிருக்கு
புரியும் உனக்கு
நீ கடக்கும் 
பாதை தூரமில்லை!

நீ வாழும் போதே பேசு
உன்னை பேச வை
உதவு 
உதவிட வகை செய்...

இது தத்துவம் அல்ல,
உன் மகத்துவம்
அறிந்துக்கொள்!

இன்னும் தேடு
பல உண்மைகள்,
மறைந்து இருக்கு
புதைந்து இருக்கு
உனக்குள்ளே இருக்கு...!

2 கருத்துகள்: