மருத்துவக் கவிதைகள் . லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவக் கவிதைகள் . லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 ஆக., 2012

தர்பூசணி...கவிதை













மனிதனுக்கும் 
பழத்துக்கும்
ரத்த உறவுகள்,
சத்து உறவுகள், 

என...
உறவாட 

உரிமைவுண்டு!

இந்த தர்பூசணிக்கும்
பங்குவுண்டு!
சிட்ருலின் என்னும்,
சத்து பொருள்
இருப்பதைக் கண்டு ,
உண்டால் பலனுண்டு

தர்பூசணி உண்டால்
சிட்ருலின்
வேதியல் பொருளாய்
அர்ஜினைன் மாறும்

தன் வேலை செய்யும்.

ரத்தத்தோடு கலந்து
நம் உறுப்புகளை
சுறுசுறுப்பு தந்திடும்.
இன்னும் தர்பூசணி
சுவைத் தந்திடும்...

தர்பூசணி வெள்ளை
பகுதியோ
ஆண்மைக்கு அழகு
சேர்க்கும்!


தர்பூசணியை...
ருசித்துப் பார்த்தால்
உடலும் அறிந்திடும்
உண்மை புரிந்திடும்!

12 ஜூன், 2012

முலாம் பழம். பலத்தின் முகவரி


முலாம் பழம்

முலாம் பழம்.
கொடி வகை இனம்.

குளத்தின் 
கரையோரங்களில் 
சிரித்தவன்ணமாய்
வளரும் இந்த  பழம்.
பாத்தாலே ஈர்க்கும்..!


மலச்சிக்கலை உடைத்து 
உடலுக்கு உரமளிப்பது 
முலாம்பழம். 

உடம்பு எடை  போட
நாடினால் 
இதனை 
அடிக்கடி சாப்பிடலாம்
இல்லை
பானமாய்  குடிக்கலாம்.


அறுசுவை குணம் 
தருவது இந்த பழம்.
பலத்தில் 
நூறு சதவிகிதம்,
இருப்பது கண்டும்,
உண்ணாமல்,
பருகாமல்,
இருந்தாலோ...

இதன் மருத்துவம், 
மகத்துவம் 
அறியாமலே போகும்...

இந்த பழமோ  
வெள்ளரி இனத்தின் 
உறவு....
இன்னுமா கேட்கவில்லை 
உன் நாக்கு ...

1 ஜூன், 2012

அருகம்புல் கவிதை...



அருகம்புல்லே!
நீ அருகிலிருந்ததால் 
உன் அருமை 
எனக்கு தெரியவில்லை..


உனக்குள் இருக்கும்
மகத்துவம் 
மருத்துவம் பற்றி 
அறிய மனம் நாடவில்லை...


நீ ஏழை வீட்டு 
மருத்துவ உறவு என்பதால்,
என் மனம் ஏற்கவில்லையா ?
ஏற்க மனம் வரவில்லையா ?


உன்னை பறித்து 
அரைத்து பாலோடு பருகினால் 
உடலுக்கு நல்ல ஊட்ட சத்து 
வருவதுவுண்டு.
வெட்டுக்காயத்தை 
தடுக்கும் குணமுண்டு...



உன்னை அரைத்து 
தேனோடு ஏலக்காய் 
சேர்த்து பருகினால் 
ரத்தம் சீராக்கி 
உறுப்புகளை 
பாதுகாக்கும் படை 
வீரன் அல்லவா நீ 



நீ எங்கள் வீட்டுத் தோட்டத்து 
இலவச மருத்துவமணி 
உன்னை கவனி 
என சொல்லும் 
மருத்துவ மாமணிகள்
அடித்த மணிக்கு பின்னே...


உன் வலிமை 
அருமை ,அறிந்தேன்.
உணர்ந்தேன்...


இனி உன்னை பயிறுடுவேன்.

வளர்ப்பேன்.
உனக்கும் என் மனதில் 
இடம் தருவேன்.
உடலுக்கு வளம்
பலம் சேர்ப்பேன்...

20 மே, 2012

சூரிய குளியல்




சூரிய குளியலின் 
சூத்திரம் தெரியுமா ?


விலைக்கொடுத்து 
வாங்கி சாப்பிடும் 
மாமிச உணவுகளிலும்,
வயகரா மருந்துகளிலும் 
கிடைக்கும்...


வாலிப விருந்துக்கு 
உண்டான விட்டமின்"டி"
கிடைப்பதை அறிவீரா ?


தண்ணிரில் குளிப்பது 
உன் உடலுக்கு ஆரோக்கியம் 
சூரிய குளியல் 
உன் உணர்வுக்கு விருந்தாகும்.


யோக ,தியானம் ,
சூரியநமஸ்காரம்,
நமது பண்பாட்டில் ஒன்று.


இதை தெரிந்து கொண்டு,
செய்துவந்தால்,


சூரியக் குளியல் 
குளித்துவந்தால்...


உணர்வுக்கும் இலவச 
மின்சாராம்.


உன் உடல் உனக்கு.
வசப்படும் 

28 மார்., 2012

நடைப் பயிற்சி



தினம் தினம் 
நடைப் பயிற்சி
ஒருவித 
உடற்பயிற்சி
உனது 
உடலுக்கு எழுச்சி




நடைப் பயணம்
கொழுப்பைப் 
பார்த்து குறைக்கும்
தொப்பையை 
கரைக்கும்...


நடப்பது நடக்கட்டும் 
நடந்து நடந்து 

இனி இளமை 
தொடர வழிப்பிறக்கட்டும்.



6 பிப்., 2012

சோற்றுக் கற்றாழை




சோற்றுக் கற்றாழை
இது ஒரு 


மருத்தவ நிவாரணி...

இலைச்சாறுகளில் 
ஆந்த்ரோகுயினோன்கள்இ
ரெசின்கள் பாலிசக்கரைடு 
மற்றும்...
ஆலோக்டின்பி’ எனும் 
பல வேதிப்பொருட்கள் உள்ளன.

பெண்களுக்கு என்றும் ராணியாய்,
வரம் தரும் 
அடுக்கு மடல் கொண்ட செடி.

இது ஒருவகை இனிப்பு கூழ்,
இது மூல நோய்க்கும்,
வயிறுப் புண்ணுக்கும்
இலையின் சாறு மருந்தாகும்.

அழகுக்கு 
அழகுச் சேர்க்கும்.
சோற்றுக் கற்றாழை
தாயகம்
தென்னாப்பிரிக்கா 
மற்றும் அரேபிய நாடாகும்...

இதை நாடாமால் போனால்
அரியசெடியை இழந்த நிலையாகும்.

இதன் மருத்துவ குணம் 
அறிந்தும்
இன்னும் நாம் வீட்டில் 
பயிரிட மறுத்ததால்,
இனியும் இல்லாமல் போனால்
நமது இயலாமையைக் குறிக்கும்...

வரும் தலைமுறை சபிக்கும்
இளமைக்கு 
இது தேவை என்றால்
இன்னுமா தயக்கம்...
பயிரிட ஏனப்பா சுனக்கம்?

இதன் மருத்துவம் 
பயன் தரும்.
இளமை தரும்
சோற்றுக் கற்றாழை,
நமக்கு என்றும் சொந்தம்

1 பிப்., 2012

சீத்தாப்பழம்...(மருத்துவக்கவிதை)












பல்லுக்கும்
எலும்புக்கும்,
சீத்தாப்பழம் 
சிறப்பு பெரும்,

முடி உதிர்வை தடுக்க,
பலத்தின் விதைப்பொடி
விடைசொல்லும்.

மேலும் 
சிறுபயறு மாவு 
கூட்டணி சேர,
பேன்கள் ஒழிந்துப்போகும்...

முடி மிருதுவாகும்
அழகு சேர்க்கும் வழியில்
சித்தாப்பழம்
தலைமை ஏற்கும்.

இதயம் காக்கப்படும்
பலப்படும்
காசநோயை விரட்ட 
துணை நிறுக்கும்...

பழத்தின்  பலன்களை 
அறிய...
இந்த சீத்தாப்பழம் 
உண்டு வாழ்ந்தால்
உண்மை புரியும்...

27 ஜன., 2012

மருதாணி...



தாவணிகள் எழுதும்
கவிதையே மருதாணி!

இலைகளை மைய அரைத்து,
கைகளில் கோலமிட்டால்,
மணப்பெண்ணின்,
அழகுக்கு .அழகு சேர்க்கும்,

திருமண,பண்டிகை 

காலத்திலும்
புடவைக்கும்

தாவணிக்கும்...

மருதாணியே 

தனி அழகூட்டும்
மனதை ஈர்க்கும்!

தலை நரைக்கும்,
கால் ஆணிக்கும் 

மருந்தாகும்!

தூக்கம்,மறந்த 

துக்கத்திற்கும்
பூவையர் போலவே....

மருதாணி பூவும்

தலையணையாய்
மாறினால் தூக்கம் வரும்!

மறுதோன்றி

அழவணம்
 ஐவணம்
மெகந்தி 
என்ற 
துணைப் பெயர்கள் கொண்ட,

மருதாணி ஒரு 

கிருமி நாசினி,
மறுக்காமல் 

நீ வளர்க்க யோசி!

25 ஜன., 2012

வெற்றிலை....



வெற்றிலை
இதன் முகவரி மலேசியா!
இது ஒரு மருத்துவ மூலிகை!


தமிழர்களின் 
கலாச்சாரத்தோடு
இணைந்து
மங்கள காரியத்தில்,
முகமலர்ச்சியோடு
வரவேற்பதில்
இதன் முக்கிய நிலை!


விதைகள் இல்லாத 
கொடித்தாவரமே 
இந்த வெற்றிலை!
இதன் காம்புகளை
வெட்டி பதியம் போட்டாலே 
வளரும் இந்த இலை !


கரும் பச்சையை 
ஆண்ணென்றும்,
இளம் பச்சையை
பெண்ணென்றும்,
வெற்றிலைக்கு 
உறவுண்டு...
இல்லற நல் உறவுக்கும்
இதில் பங்குண்டு!


கால்சியம்
இரும்பு 
நீர்சத்து,புரதம்,
கொழுப்பும் 
கலந்திருக்கு...

சவிக்கால் 
என்ற வீரியமும்
நிறைந்து இருக்கு...


வெற்றிலையோடு 
பாக்கும்,
சுண்ணாம்பும் 
கலந்தால்,
வாய் சிவக்கும்
நாற்றத்தை விரட்டும்
உண்ட உணவு
 
ஜீரணமாகும்!


வெற்றிலை .
இது வெற்றி இலை
மருத்துவத்தில்
மகத்துவம் கொண்ட,
உறவுனிலை 
இந்த வெற்றிலை !


கும்பகோணம் வெற்றிலை
உலகப் பெயர் பெற்றது
இதை அறிய
சுவைத்து பார்த்து
சொன்னால் 
எனது கவிதைக்கு
நீங்கள் தரும் 
வாழ்த்து மாலை!

21 டிச., 2011

குங்குமப்பூ!






மணம் வீசி 
வர்ணத்தை 
கொடுத்து 
மனதை 
கொள்ளைக்கொண்டு 
அழகாய் மாற்றும் 
குங்குமப்பூ!


காஷ்மீரின் 
கனவுக் கன்னி
இந்த குங்குமப்பூ !


மலையை தாண்டி 
வந்தாலும்,
காரமும் மனமும்,
மாறாத ஜாதிப் பூ...


நோய் தீர்க்கும் 
மருந்தாகவும்,
அழகான
நிறத்துக்கு 
வரமாகவும்...


பூவையர்கள் 
சுடாத பூவாகவும்
உட்கொள்ள
மறுக்காத பூ 
குங்குமப்பூ!


பூவோடு மணக்கும் 
நாருப்போல.
தாய் உட்கொண்டால்..
பிறக்கும் குழந்தைக்கும்,
அழகூட்டும்,
குங்குமப்பூ!


பன்னீர் ரோஜா
கல்கண்டு
தேன் குங்குமப்பூ
கூட்டணிகள் சேர்ந்தால்


தாதுக்கும்
பெண்களின் மாதவிலக்கும்
அரும் மருந்தாகும்...


உன் உடலுக்கும்
பளபளப்புக்கும்
தூணாயிருக்கும்

14 டிச., 2011

வாழைப்பழம் ...



வாழைப்பழம் ...
தெருக்களில் மலிவாக
கிடைக்கும் உன்னதமான
பலம் பொருந்திய பழம்!

ஃபிரக்டோஸ்,சுக்ரோஸ்,
போன்ற சர்க்கரைகளுடன்
நார்ச்சத்தும் 
கூட்டணியோடு
நல்லாட்சிவுடன்
ஆசியும் 
தரும் இந்த பழம்!

தமிழ்ப் பேசி,பழக
வாழைப்பழம் பழம்
துணைப் புரியும்.

டென்னிஸ் விளையாட்டு
வீரங்கனைகளுகும் இது,
தோள் கொடுக்கும்,
உரமாய் மாறி 
விளையாட 
துணை நிறுக்கும்

வலுவில்லாத 
நிலைகளிலும்,
100முதல் 150 வரை 
தாரைத் தாங்கும்,
வாழை  மரம் 
விந்தையான மரம்.

உண்டப்பின்
விட்டமின்
பொட்டாசியம்
உடலுக்குள்  மாறும்!

தற்போது 
எய்ட்ஸ் வராமல்
தடுக்கும் மருந்தும் 
கிடைக்கலாம் என்ற
கருதும்  நிலை 
இருக்க...

இன்னும் சொல்லலாம்.
வாழைப் பழத்தின்
பலனை..
நீ அறியணும்,
இதன் குணத்தினை

மங்கலக்  காரியத்தின் 
நண்பன் இவன்..
இனி இவனை
உன் வீட்டில் வளர்த்தால்
உன் உடம்புக்கும் நலம்
இந்த பழம் தரும் பலம்

2 நவ., 2011

மிளகு.!மருத்துவக் கவிதைகள் .





மிளகு.!
விஷத்தை முறிக்கும்
விசியம் இதிலிருக்கு.

கை வைத்தியத்தில்
மிளகுக்கே முன்வுரிமை.

எதிரி வீடுக்கும்,
கைப் பிடி மிளகோடு
பயமின்றிப் போகலாம்.

மிளகு மற்றும் வால் மிளகு 
என இரு வகைப்படும்.

மிளகுக்கு 
மலையாளி, குறுமிளகு 
கோளகம்.என்ற 
பெயரும் உண்டு 

கொடிவகை செடி.
இதன் காய்களை
காயவைத்தாலே 
மிளகு அவதாரம்.

மிளகுப்பற்று கண்டால் 
தலைவலி ஓடும் 

மிளகுத் தூளும் 
உப்புத் தூளும் 
கலந்து பல் துலக்கி வர 

பல்வலி, ஈறுவலி, 
வாயில் துர்நாற்றம் 
எல்லாம் மறையும்.

மிளகு ரசம் என்றால்
சாதமும்
சத்தமில்லாமல் போகும்.

கண் திருஷ்டிக்கு
கண் கண்ட பொருள்.

ஊக்கம் பெறவும்
குறைகள் போக்கவும்...

விஷத்தை விரட்டும் 
மிளகு மருந்தாகும்

மிளகை நீ உண்டுவந்தால் 
பல நோய்க்கு தீர்வாகும். 

24 அக்., 2011

பச்சைக்கறிகளை...



தினம் தினம்
காய்கறிகள் கலந்த உணவு,
உண்டால் இல்லை,
பின்விளைவு!

முட்டைக் கோஸ்,
காலி ஃபிளவர், கீரை
உடலுக்கு தேவை

உண்டுவந்தால் கிடைக்கும்
டி சத்துக்கள்!
ரத்தத்தை உறையவைக்கும்
இவைகள்!
இல்லையென்றால் உத்திர
போக்கு அல்லவா தொடரும்.
அவல நிலைகள்...


பீன்ஸ், பட்டாணி,
பச்சைக் காய்கறிகள்,
வேண்டும்..!


இதை சாப்பிட்டால் தான்
சுண்ணாம்பு சத்துக்கு
மனுப்போட முடியும்!


ஆன்டி ஆக்ஸிடன்ட்
நிறைந்த உணவு வேண்டும்
என்றால் பச்சைக்கறிகளை...


தெளிவுக் கொண்டு
உண்ண பழகு,
பளபளக்கும் உடல்
கிடைக்கும் பாரு!


புதினா, கொத்துமல்லி,
கருவேப்பிலை, கீரைகள்
காய்கறி விதைகளை
விதைக்க நாடு!


உன் வீட்டுக்கும்,
உனக்கும் அழகு!
என்பதை சொல்லும் 
காய்கறியை உண்ண பழகு1

6 மார்., 2010

தர்பூசணி பழத்தின் சிறப்பு!கவிதையோடு










மனிதனுக்கும் பழத்துக்கும்
ரத்த உறவுகள்...
சத்து உறவுகள்...
என உறவாட 
உரிமைவுண்டு!


இந்த தர்பூசணிக்கும்
இதில் பங்குண்டு.
சிட்ருலின் என்னும்,
சத்து பொருள்
இருப்பதைக் கண்டு ,
உண்டால் பலனுண்டு 


தர்பூசணி உண்டால்
சிட்ருலின்
வேதியல் பொருளாய்
அர்ஜினைன் மாறும்.
தன் வேலை செய்யும்.


ரத்தத்தோடு கலந்து
நம் உறுப்புகளை
சுறுசுறுப்பு தந்திடும்.
இன்னும் தர்பூசணி
சுவைத் தந்திடும்


தர்பூசணி வெள்ளை
பகுதியோ
ஆண்மைக்கு அழகு
சேர்க்கும்!


தர்பூசணியை...
ருசித்துப் பார்த்தால்
உடலும் அறிந்திடும்!
உண்மை புரிந்திடும்!




4 மார்., 2010

தக்காளி நீண்ட ஆயுளின் வழி!





தக்காளி!
தடையின்றி கிடைக்கும்,
இதை சாப்பிட்டால்
தடையின்றி ரத்தம் ஓடும்.

ஆஸ்பிரின் மாத்திரையின்

மறுஅவதாரம்.
தினமும் உண்டால்
பசியின்றி போகும்.

குண்டுயாகாமல் உன்

எடையை தடுக்கும்.
முகம் அழகாகும்.


அஜீரணத்துக்கு மருந்து.
தக்காளி சாறு நீ அருந்து.

தினம் உணவுவோடு,

நீ சேர்த்துக் கொண்டு,
நீண்ட ஆயுளை அதிகப்படுத்து.

மருத்துவத்தின் உண்மை மாதுளை!




மாதுளை!
இனிப்பும்,புளிப்பும் ,
கொண்ட வகைகள்,
வலம் வருவதுண்டு!




இனிப்பு மாதுளையோ,
இதயத்திருக்கும்...
மூலைக்கும்...
ஆற்றலை தருவதில்
அக்கரைவுண்டு!


பித்தத்தை போக்கி
இருமலை, நிறுத்திவிடுவதில்
மாதுளை ஒரு அணிந்துரை!




புளிப்பு மாதுளையோ...
வயிற்றுக் கடுப்பு
நீக்கி,
இரத்த பேதியை
நிறுத்தி,
வயிற்றின் புண்ணை
ஆற்றிவிடும்.


தடைப்பட்ட சிறுநீரும்
தடையின்றி வெளியேறும்.
மாதுளம் விக்கலுக்கு
விடை சொல்லும்!


தாகம் தீர்க்கும்
பானமாகும்,
கோடைக்கு
இதமாகும்.


மாதுளை 
தினம் அருந்திவந்தால் 
உடம்பில் தோன்றும் 
வெள்ளை படலத்தை 
அகற்றும்!


மாதுளை சாற்றில்
கற்கண்டு கரைத்து குடித்தால்
உஷ்ணம் உடலை விட்டு ஓடும்!


புது உற்சாகம் தோன்றும்.
மாதுளை சாற்றில்
தேன் கலந்து குடித்தால்
உடலில் மாற்றம் வரும்!
சோம்மல் முறிந்து போகும்.


மருத்துவத்தின் மாமருந்து 
இந்த  மாதுளை!
உண்டுப்பார்த்தால் 
புரியும் உண்மை !


26 பிப்., 2010

முருங்கை கீரை அரும் மருந்தாகும்.



முருங்கை கீரை
அதன் மகத்துவம் 
அறிவீரோ!


தாது பலத்துக்கும்
தூதுவாகும்.


ரத்த அழுத்தமும்
குணமாகும்!


கொழுப்புகள் கூட
கரைந்து போகும்.
சக்கரை நோயும்
குறைந்துபோகும்!


கண் பார்வை தெளிவாகும்.
நீ உணவாய் உண்டால்
நலமாகும்!


முருங்கை கீரை
அரும் மருந்தாகும்.
நம் வீட்டில்
முருங்கை வளர்த்தால்,
சில நோய்கள்
பயந்து போகும்!

இளகிய மரம்
காற்றுக்கு இணங்கிடும்.
நம் உடலுக்கு
பலம் தரும்
இதன் தந்திரம்.

உடலுக்கு முறுக்கு
தந்திடும் முருங்கை .
உடல் முழுதும்
பாய்ந்திடும் வேங்கை.


இரவுக்கு இது இனிப்பு
இந்த முருங்கையே
ஆண்மைக்கு உகப்பு 
இதன்  சிறப்பு...

வெங்காயம் !





என் பெயரை
அடிக்கடி
சொன்னவர் பெரியார்!


என்னை பார்த்தல்
எரிச்சல் உண்டாகி
கண்ணீர் வரும்.
இப்பினும் என்னை
வெறுப்பவர் யாருமில்லை.

நானில்லாமல்
எந்த உணவும் ருசிப்பதில்லை.
என்னை உரித்தால் ஒன்றுமில்லை.


என்னை
அறிந்தோருக்கு சுவையாவேன்!
நானோ அணைப்புக்கு
ஆண்மையாவேன்


மாம்பழம்.



எனது பூர்விகம் 
இந்தியாதான்.
முதலில் என்னை 
புரிந்துக்கொள்ளுங்கள்!

என்னை சூடு என
ஒதிக்கி வைக்காதே!
என் பலனை 
அறிய மறவாதே!

எனக்குள் இருப்பது
ஏ,சி,வைட்டமிகள்
தோலோடு உண்டால்
ஓசியாக கிடைக்கும்,
ஆரோகியங்கள்!


என் கொட்டைகளில்
கால்சியம் ,கொழுப்பும்
இருப்பதை அறியுங்கள்.


அல்போன்சா,பகனபள்ளி,
ராஸ்புரி நீலம்,ஒட்டு
மல்கோவா,என எனக்கு
உடன்பிறப்புக்கள்.


எங்களை ரசித்து
உண்ணுங்கள்

இயற்கையாய் கிடைக்கும்
சத்துக்களை சாப்பிட்டு
பழகுங்கள்,
உங்கள் உடலுக்கு உதவுங்கள்.


முக்கனிகளில் ஒன்று பலா!





முக்கனியில் ஒன்று
இந்த பலா.

பெண்ணின் இதழை விட
சுவை இந்த பலா.

மூளைக்கும் ,உடலுக்கும்
பலம் சேர்க்கும் பலா .

ரத்தத்தை விருத்தி
செய்யும் இந்த பலா .

முள்ளாயிருந்தாலும்
சுவை தரும் பலா .

எதிர்ப்பு சக்தி தரும்
பழமாய் வலம் வரும்
இந்த பலா!

பழத்தில் பலா,
இது ஒரு நிலா.