திரைப்படம் ஒரு பார்வை... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரைப்படம் ஒரு பார்வை... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2 ஜூலை, 2012

சூர்யா நடித்து வரும் மாற்றான்....ஒரு பார்வை...,

   


சூர்யா நடித்து வரும் மாற்றான் திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் திகதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கே.வி.ஆனந்த், சூர்யா, ஹாரீஸ் என ’அயன்’ படத்தில் பட்டையைக் கிளப்பிய அதே கூட்டணி, ’மாற்றான்’ படத்தில் மறுபடியும் கைகோர்த்திருக்கிறது.

சூர்ய நடித்த படங்களிலேயே அதிக செலவில் எடுக்கப்படும் திரைப்படம் மாற்றான். இப் படத்தை அயன், கோ போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய கே.வி ஆனந்த் இயக்குகிறார். பெரிய பட்ஜெட் படம் என்பதால் இயக்குனர் இப் படத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக பேசப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் இன் சிவாஜி திரைப்பட பாடலான ”பல்லேலக்கா” பாடல் பூனாவில் படமாக்கப்பட்ட அதே ஸ்தானத்தில் மாற்றான் பாடல் ஒன்றும் படமாக்கப்படுகிறதாம்.

ஹரீஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகும் மாற்றான் திரைப்பட பாடல்கள் ஜூன் இல் வெளியாக இருக்கும் நிலையில், இத் திரைப்படம் ஜூலை மாதமளவில் திரையிடப்படும் என எதிர்பர்க்கப்படுகிறது.சூர்யா மாறுபட்ட இரட்டை வேடங்களில் நடித்து வரும் மாற்றான் படம், நாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.

சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் ‘மாற்றான்’ ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவின் புறநகர் ஸ்லம்களில் படம்பிடித்து திரும்பியிருக்கிறது ’மாற்றான்’ படக்குழு. சென்னை திரும்பிய கையோடு, ஏ.வி.எம் ஸ்டூடியோவில் மிக பிரமாண்டமாக ஒன்றரைக் கோடி செலவில் போடப்பட்டிருந்த செட்டில் “திண்ணத் திண்ணத் தீர்ந்தாயா?” என்ற பாடலை படமாக்கியிருக்கிறார்கள். நடன இயக்குனர் பிருந்தாவின் கோரியோலிராபியில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான இந்தப் பாடலை பத்து நாள் சூட் செய்திருக்கிறார்கள்.

பாகிஸ்தான் எல்லை, ஹைதராபாத், ரஷ்யா, குரேஷியா, செர்பியா, அல்பேனியா, மசிடோனியா ஆகியவற்றின் மிக வித்தியாசமான இடங்களில் மாற்றான் படப்பிடிப்பு நடந்துள்ளது.

கோலிவுட்டின் கரண்ட் பிஸ்னஸ் வேல்யூ படி ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் சூர்யா என்று சொல்லி அதிர வைக்கிறார்கள். முன்றாவது இடத்தில் விஜயும் நான்காவது இடத்தில் கமலும் இருந்தார்களாம். தற்பொது கமலின் நான்கவது இடத்தையும் ’மங்காத்தா’ வெற்றியின் மூலம் அஜித் தட்டிக் கொண்டு போயிருகிறார் என்கிறார்கள்.

ரஜினி, கமலுக்கு அடுத்த நிலையில் அஜித், விஜய் ஆகியோரை விட நான்கு கோடி அதிகம் ஊதியம்பெரும் வாங்கும் முன்னனி ஹீரோவாகியிருக்கும் சூர்யாவின் ’மாற்றான்’ திரைப்படம் சூர்யாவின் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு உலகம் முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி வெளியாகிறது.

வழக்கம் போல் இவரின் இந்த படமும் ரொம்பவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா என்றால் வித்தியாசம் ,புதிய கதை என்ற எண்ணம் நமக்குள் 
இந்த படமும் நம்மை ஏமாற்றாது எனபது உண்மையாய் அமையட்டும் 

20 ஜூன், 2012

சகுனி திரைப்படம் ஒரு பார்வை...


 
இது சகுனி வேலையா இல்லை உண்மையா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் என்று கூறுகிறார்கள் அஜித் ரசிகர்கள். பெயருக்கேற்ப சகுனி டீம் சகுனி வேலையில் இறங்கிவிட்டா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக சொல்கிறார்கள் சகுனி ரசிகர்கள். இது குறித்த செய்தி :

அஜீத் நடிப்பில் தயாராகி, அடுத்த வாரம் வெளியாகவிருந்து, பின்னர் தள்ளிப் போயுள்ள பில்லா 2-ன் தெலுங்கு விற்பனை உரிமையை விட அதிக விலைக்குப் போயுள்ளது கார்த்தியின் சகுனி படம்.

தெலுங்கில் ஆரம்பத்திலிருந்தே கார்த்திக்கு நல்ல வரவேற்பு. சகுனி அவரது ஆறாவது படம். இப்போதே பெரிய நடிகர்கள் வரிசைக்குப் போய்விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சகுனி படத்தைப் பொறுத்தவரை, எல்லாமே பக்கா திட்டமிடலோடு நடக்கிறது. படத்தைத் தொடங்கியதிலிருந்து, முடித்து சென்சாருக்கு அனுப்பி, ரிலீஸ் தேதி அறிவித்தது வரை எந்தத் தடுமாற்றமும் இல்லை

பில்லா 2ம் சகுனியும் ஒரு நாள் இடைவெளியில், அதவாது ஜூன் 21, 22 ஆகிய தேதிகளில் வெளியாவதாக இருந்தன. ஆனால் கடந்த வாரம் சென்சாருக்குப் போன பில்லா 2-க்கு ஏ சான்றிதழ் கிடைத்தது. அத்துடன் படத்திலிருந்து பல வன்முறை காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன. இதனால் தயாரிப்பாளர் அதிருப்தியில் உள்ளார்.

இப்போது ‘பில்லா 2′ திரைப்படத்தின் வெளியீடு எந்தவித அறிவிப்பின்றி தள்ளிப்போய்விட்டது.


பில்லா 2. பட வெளியீடு இந்த மாத இறுதியிலா... அடுத்த மாதமா என்று தெரியாத நிலை.

இது சகுனிக்கு ரொம்ப சாதகமாக அமைந்துள்ளது. தமிழில் சோலோ ரிலீசாகக் களமிறங்கும் இந்தப் படத்துக்கு இதுவரை 450 திரையரங்குகள் ஒப்பந்தமாகியுள்ளன. இதற்கு முன் கார்த்தி என்ன... சூர்யாவின் படமே தமிழகத்தில் இத்தனை அரங்குகளில் வெளியாகியிருக்குமா என்பது சந்தேகம்!

தியேட்டர்காரர்கள் பெரிய தொகையை மினிமம் கேரண்டியாகத் தந்துள்ளனர். காஞ்சிபுரத்தில் ஒரு காம்ப்ளெக்ஸ் மட்டுமே ரூ 30 லட்சத்தை இந்தப் படத்துக்குக் கொடுத்துள்ளதென்றால் சகுனி ஆனால் சகுனி திரைப்படம் திட்டமிட்டபடி ஜூன் 22ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.


சகுனி படம் வெற்றி பெற வாழ்த்துவோம் 

சகுனி பாடல் வரிகள்


மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்
என்னாகும் உயிரே உயிரே....
என் கண்ணில் வந்து நின்று என்னை பறித்தாய்
என்னாகும் உயிரே உயிரே....!

இரவில் வந்தது சந்திரனா
என் அழகே வந்தது உன் முகம்தான்
வெண்ணிலவோ வளர்ந்ததும் தேய்ந்திடுமே
உன் அழகோ தேய்ந்திடாத வெண்ணிலா
பகலில் இருப்பது சூரியனா
என் அழகே உன் இரு பார்வைகள்தான்
உன் இமைகள் போரிடும் ஆயுதம் தான்
என்னுயிரே என்னை என்ன செய்கிறாய்

மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

வானில் போகும் பறவைகளாய் நீயும் நானும் திரிந்திடலாம்
உலகையே மறக்கலாம்
வேறு வேறு விண்வெளியில் மாறி மாறி திரிந்திடலாம்
பறக்கலாம் மிதக்கலாம்
காற்றாகி கைகோர்த்து போவோமே
முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்

கனவில் வருவது சாத்தியமா
என் எதிரே நடப்பது மந்திரமா
நான் பார்க்கும் காட்சிகள் தந்திரமா
என் தேகம் எங்கும் நீந்தி போகுதோ

கனவில் வாழ்வது சாத்தியமே
என் கனவும் பலிப்பது நிச்சயமே
உன் விரலை பிடிப்பேன் இக்கணமே
உன் உருவம் எங்கும் இன்றும் வாழுமே

மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

காதலாகி கரைந்துவிட்டால் காலம் நேரம் மறந்திடுமே
வானிலை மாறுமே....
ஏழு வண்ண வானவிலில் நூறு வண்ணம் தோன்றிடுமே
யாவுமே மாயமே
வெயிலோடு மழை வந்து தூறுமே
முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்


தரையில் விண்மீன் வருவதில்லை
வந்தாலும் கண் அதை பார்ப்பதில்லை
பார்த்தாலும் கை அதை தொடுவதில்லை
தொட்டாலோ என்ன ஆகும் என் மனம்

தரையில் விண்மீன் வருவதுண்டு
வந்தாலும் கண் அதை பார்ப்பதுண்டு
பார்த்தாலும் கை அதை தொடுவதுண்டு
தொட்டாலோ காதல் ஆகும் உன் மனம்

மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

10 ஜூன், 2012

வெங்’காயம்’...





கமர்ஷியல் ஹீரோக்களின் மெகா பட்ஜெட் படங்கள், புது இயக்குனர்களால் உருவாகும் சிறந்த கதையம்சமும், கருத்தும் கொண்ட சிறிய பட்ஜெட் படங்களை தலைதூக்க விடுவதில்லை. அப்படி உருவானதே தெரியாமல் மறைக்கப்பட்ட படம் தான் வெங்’காயம்’. 


சங்ககிரி ராஜ்குமார் இயக்கிய வெங்காயம் படம் ரிலீஸான போது பெரிய ஹீரோக்களின் படங்கள் அனைத்து திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டதால் தியேட்டர் கிடைக்காமல் வெளியேற்றப்பட்டது. அதன் பிறகு இயக்குனர் சேரனின் முயற்சியால் மறுபடியும் ரிலீஸான வெங்’காயம்’ ரசிகர்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. ரீரிலீஸான வெங்’காயம்’ படம் 75 நாட்களை கடந்துள்ளது. 


வெங்’காயம்’ படத்தின் இந்த வெற்றியை பற்றி பேசும் போது இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் “ ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்று கூட தெரியாமல் இருந்த வெங்’காயம்’ இன்று 75 நாட்களை கடந்து வெற்றியடைந்துள்ளது. முக்கிய நகரங்களில் வெங்’காயம்’ படத்தை எடுத்துவிட்டு புதுப்படங்கள் திரையிடப்பட்டாலும் கிராமங்களில் வெங்’காயம்’ மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. வெங்’காயம்’ படத்தின் இந்த வெற்றியை பத்திரிக்கை நண்பர்களுக்கு மகிழ்ச்சியுடன் சமர்ப்பிக்கிறேன். 


பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை நடைபயில அன்னையின் கைகளை பிடித்துக் கொண்டு நடக்க முயற்சிப்பது போல, ரிலீஸுக்கு தயாரானதும் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த வெங்’காயம்’ படத்தை ஒரு அன்னையாய் கைகளை பிடித்து அழைத்துச் சென்று நடக்க சொல்லிக்கொடுத்தது பத்திரிக்கை நண்பர்கள் தான். இன்று படம் நன்றாக ஓடவே துவங்கிவிட்டது. இந்த நேரத்தில் இயக்குனரான என் அரம்ப கால வாழ்க்கையை பற்றி சொல்லியே ஆகவேண்டும். 


இயக்குனராகும் ஆசையில் இங்கு வந்த நான் என் தந்தை உணவுக்காக அனுப்பும் பணத்தை புத்தகங்கள் வாங்கி படித்தும், திரைப்படங்கள் பார்த்தும் பட்டினியாகக் கிடந்தேன். பட்டினி கிடக்கும் கஷ்டத்தை அனுபவித்த நான், என்னால் முடிந்தவரை மற்றவர் பசியை தீர்க்க வேண்டும் என உறுதியாக இருக்கிறேன். வடபழனியில் ஒரு ஹோட்டல் துவங்கவிருக்கிறேன். ஒரு காபிக்கு கொடுக்கும் பணத்தில் ஒரு வேளை உணவு கிடைப்பது தான் மக்களுக்கு மகிழ்ச்சி. 


நான் துவங்கும் ஹோட்டல் லாபம் கொடுக்கவில்லையெனினும் ‘ ஒரு காபியின் விலையில் ஒரு வேளை உணவு’ என்ற வகையிலேயே இயங்கும். அண்ணன் சேரனுக்கும், மற்ற டெக்னீஷியன்களுக்கும் நன்றி சொல்ல நான் கடமைபட்டிருக்கிறேன். சேரன் அண்ணன் எனக்கு உதவிய வகையில் நான் மற்றவர்களுக்கு உதவ விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்..


படம் சொன்ன பாடமாய் பசி தீர்க்கும் நிலையில் செய்த நன்றி இன்று....
வெங்காயம் வெறும் காயமாய் போகமால் ,நட்டத்தில் ஏறிப்போகாமல் காப்பாற்றிய பெருமை சேரனுக்கே...
சேரனுக்கு வாழ்த்து சொல்லுவோம்...


8 ஜூன், 2012

விஸ்வரூபம்....திரைப்படம் ஒரு பார்வை...






































மாறுபட்ட புகைப்படம் ,வியக்கவைக்கும் நிலையில் விஸ்வரூபம் 
திரைபபடம் ...அப்படி இப்படி என்று பல கதைகளுக்கு நடுவியில் பேசப்பட்டு மிகவும் எதிர்பார்க்க வைத்துவிட்டது என்றால் பொய்யில்லை...


பல கேள்விகளுக்கும் யூகங்களுக்கு பதிலுரைக்க 
உண்மையான ரூபத்தை காண காத்திருப்போம்...