13 ஜன., 2012

வறுமை...துளிப்பாக்கள்.






வயிறு செய்த
களங்கம், இந்த
வறுமையின் காயம்.


===========================
அம்மா பிச்சை போடுங்க.
வறுமையின் கூப்பாடு
இல்லை மதத்தின் கோட்பாடு.


============================

வாழ்க்கையின் விலாசத்தை
அறிந்து வந்து போகும் 

வறுமை
ஏழைகளின்  பங்காளி.


===============================

வறுமையின் நிறம் சிவப்பு
ஏழைகள் என்றால் உகப்பு,
வந்துவிட்டால் 

வெறுத்துவிடும் பிறப்பு.

=================================
இளமையும் வறுமையும்,
சண்டைப்போட்டால்...
இளமை இணங்கி 

வறுமைக்கு வழிவிடும்
குற்றங்கள் செய்ய 
துணைப்போகும்....
==================================
வாழும் போது
பசியை தந்து 
உயிர்களை அபகரித்து 
கொண்டது வறுமை...
====================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக