7 ஜூலை, 2015

ஆசை சொல்லா...

உன் எண்ணத்தை
சொல்லாமல் சொல்லும்
ம்ம்ம் என்னும்
உன் ஒரு சொல்லை
ஆசை சொல்லா
இல்லை
ஆச்சிரிய சொல்லா?
ம்ம்ம்ம் எப்படி எடுத்துக்கொள்வது

5 ஜூலை, 2015

ஒரு வரி கவிதையாய்...!

கவிதை எழுத நினைத்து
மனதுக்குள் வாசித்து பார்த்தேன் 
உன் வாசமே மீண்டும் வந்தது
உன் பெயரையே எழுதிவிட்டேன்
ஒரு வரி கவிதையாய்...!

நட்பால்..

அன்பால்
அதன் ஈர்ப்பால்
நட்பால்
ஆண்பால் 
பெண்பால்
ஒன்றாகி போனது..!

காந்தப் பார்வையாடா..

என் வெட்கத்தை 
வேட்டையாடியது 
உன் காந்தப் பார்வையாடா..

நேசம்...!

தரம் பார்த்து வரும் 
நேசம் 
நேசமே இல்லை ...!
வரமாய் கொள்ளுவதே
நேசம்...!