28 டிச., 2012

விடியாமலே...





சொன்ன வாக்கும் 
நாங்கள் போட்ட வாக்கும் 
மறந்த நிலையில் நாங்கள்
===================

இரண்டு மணி நேரம் 
இருண்ட தமிழகம்
அறிந்தும் ,சொல்லியும்...
இன்று இன்னும் 
விடியாமலே...

27 டிச., 2012

அவநம்பிக்கை...




பாகனுக்கு
பணத்தை பெற்று 
கொடுத்தது யானை...

கொடுத்த பொருளுக்கு 
ஆசிர்வாதம் தந்தது 
தும்பிக்கை...

காலில் விலங்கோடு 
யானை
மனிதனுக்கோ 
அவநம்பிக்கை...

24 டிச., 2012

காதல் தீ...




வாலிபத்தின்
கட்டாயக்கல்வி...

பார்த்தால் போதும்
பற்றிக்கொள்ளும்
காதல் தீ...

அணைக்க தான்
ஆளில்லை
இருந்தாலும் தொடரும்
ஒருதலையாய் 


இருவகை...


கேட்பதை கொடுக்கும்
நிலை
பெண் குழந்தைக்கு 
அப்பாவும் 
ஆண் குழந்தைக்கு 
அம்மாவும் 
அடைக்கலம்...

வேண்டியதை  பெற 
சண்டை அம்மாவிடம்
ஆண் குழந்தை...

கேட்டதை பெற 
சிரிப்புடன்  அப்பாவிடம் 
பெண் குழந்தைக்கு...

படம் சொல்லும் கவிதை ...
















வேலையின் ஆதிக்கம் 
இந்த நிலையின் 
கோலம்....
=======================
வேலையோடு வேலை 
சூழ்நிலை தந்த நிலை...


வேடிக்கை என்பது 
இளசுகளின் வாடிக்கை 


கிடைக்கும் நேரத்தில் 
ரசிக்கும் வேலை ...
========================