கல்லும்
சொல்லும்
கைவண்ணத்தில்...
===================
இடையிடையே
சிரிக்கும் சிரிப்புமும்
உன் இடையும்...
====================
தவழும் மழலையும்
காற்றோடு மழையும்
பார்க்க பார்க்க...
தலைமுறை
வரைமுறை
சொல்லும் வாழ்க்கை...
மழலை
இளமை
முதுமை என்று
பிரித்து காட்டும்
அன்பை அனைத்து
பாசத்தை நுழைத்து
காதலை விதைத்து
இன்பம் துன்பம்
இரண்டும் தந்து
மரணத்தை தரும்...
தணிக்கை அறிந்து
தனிமை உணர்ந்து
திருமணம் கண்டு
இருமனம்
இரவு குணமறிந்து
மழலை பெற்று...
இடக்கை அறியா வண்ணம்
வலக்கை கொடுக்க...
நம்பிக்கைக் கொண்டு
வாழும் நிலையே
இந்த வாழ்க்கை...
காதல்
தோல்விக்கு காரணமாய்
தாடி...
======================
காதல் தோல்வி
ஆணுக்குவரலாறு
பெண்ணுக்கு தகராறு...
=======================
தனக்காய் சொன்ன போது
காதல் இனித்தது
தங்கைக்கு யாரோ
சொன்னபோது கொதித்தது
========================

மதுரை, அக். 11-
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள கிரானைட் மோசடியில் ஈடுபட்ட பி.ஆர்.பழனிச்சாமி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார் உள்ளிட்ட கிரானைட் அதிபர்களை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.
கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வரும் தனிப்படை போலீசார் பி.ஆர்.பழனிச்சாமிக்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகள் ஆகியவற்றில் ஏற்கனவே சோதனை நடத்தி கிரானைட் தொடர்பான முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
பி.ஆர்.பழனிச்சாமிக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அவரது சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை மாட்டுத்தாவணியில் உள்ள பி.ஆர்.பி. டிரான்ஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்ற தனிப்படை போலீசார் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 13 பஸ்களை உடனடியாக பறிமுதல் செய்தனர்.
மேலும் ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் அன்னராஜா தலைமையில் அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து பி.ஆர்.பி. டிரான்ஸ்போர்ட் அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிரானைட் ஆவணங்கள் மற்றும் முக்கிய தஸ்தா வேஜூக்களை கடத்தவும் இந்த பஸ்களை பயன்படுத்தியதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக 13 பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுடெல்லி, அக். 11-
பெண்களை ஆபாசமாக சித்தரித்து எஸ்.எம்.எஸ். மற்றும் மெயில் அனுப்பினால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்குவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. பெண்களை ஆபாசமாக சித்தரிப்போருக்கு தண்டனை வழங்கும் வகையில் கடந்த 1986ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது.
தற்போது நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட நிலையில், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். இ-மெயில் மூலம் ஆபாச படங்களை அனுப்பும் செயல் அதிகரித்துள்ளது. இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்கும் வகையில், சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு பிரதமர் தலைமையிலான மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து இந்த சட்டத்திருத்தம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிகிறது. இந்த சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்தால், பெண்களுக்கு ஆபாச மெயில் அனுப்பும் குற்றச்செயலில் ஈடுபடும் நபருக்கு அதிகபட்சம் 3 ஆண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கும். மேலும் முதல் முறையாக இக்குற்றத்தை செய்வோருக்கு குறைந்தபட்ச அபராதம் 2000 ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும். ஒரு முறை தண்டனை பெற்று இரண்டாவது முறையும், இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டால் சிறைத்தண்டனை 7 ஆண்டுகளாக நீட்டிக்கப்படலாம். இதேபோல் அபராதம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை விதிக்கப்படலாம்.