10 அக்., 2012

வன்முறையின் தலைமுறை














இடி இடித்து 
மின்னல் வெட்டி 
புயல் அடித்து 
மேகம் முட்டி 
மழை கொட்ட...

கரைகளை உடைத்து 
மரங்களை சாய்த்து 
மின்சாரம் தடுத்து...

வெள்ளத்திலும் 
இருளிலும் 
பூமி நிலைமாறி...


வன்முறையின் 
தலைமுறை 
இயற்கையாய் 

ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம்

புதுடெல்லி, அக்.10-

டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நாங்கள் ஆலோசித்து வருகிறோம். இந்த சட்டத்தை மேலும் வலுவாக்க இந்த நடவடிக்கை அவசியமாகிறது. அரசு ஊழியர்களின் நேர்மைத்தன்மையை மிகவும் சிறப்பாக பேணும் வகையிலும், ஊழல் தடுப்பு சட்டத்தை திருத்த அரசு திட்டமிட்டுள்ளது.

அவநம்பிக்கை மற்றும் எதிர்மறையான தன்மைகளுக்கு எதிராக கவனம் செலுத்தவில்லை எனில், ஊழல்களை தடுக்க நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் பலன் அளிக்காது. மக்கள் மத்தியில் அரசு ஊழியர்கள் மீதான நம்பிக்கையின்மை மேலும் அதிகரித்து விடும்.
 மாலைமலர்  

9 அக்., 2012

தாயகம்...













தண்ணீரே உடையாய் 
உறவாடிய இடம் 
தாயகம் 

பஸ்சில் ஓட்டை: மழையில் நனைந்த பயணிகள் நடுவழியில் இறங்கி போராட்டம்

கொடுமுடி, அக். 9-

ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு கன மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று இரவு 8.40 மணிக்கு ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து மதுரை நோக்கி ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

பஸ் புறப்பட்ட சில நிமிடங்களில் மழை கொட்டியது. இதையடுத்து பஸ்சின் மேற்கூரையில் இருந்த ஓட்டைகள் வழியாக மழை தண்ணீர் ஒழுக தொடங்கியது. பயணிகள் லேசான ஒழுக்குதானே பின்னர் சரியாகிவிடும் என நினைத் தனர். ஆனால் ஈரோட்டில் மழை வெளுத்து கட்டியதால் ஒழுகுவது இன்னும் அதிகமானது. பயணிகளின் உடைகள், இருக்கைகள் முழுவதும் நனைந்து விட்டது. எங்கும் உட்காரவோ, நிற்கவோ இயலவில்லை.

இதைத்தொடர்ந்து பயணிகள் தங்கள் உடமைகளை தலைமீது வைத்து பஸ்சுக்குள் பயணம் செய்தனர். இந்த நிலையில் பஸ் 9.45 மணிக்கு கொடுமுடி வந்தது. அப்போதும் மழை நின்றபாடில்லை. இதனால் வெறுத்துபோன பயணிகள் பஸ்சைவிட்டு கீழே இறங்கினர். பின்னர் பஸ் முன்பு நின்று கொண்டு கண்டக்டரிடம் டிக்கெட் பணத்தை திருப்பி கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

அப்போது கண்டக்டரும், டிரைவரும் கரூர்வரை வாருங்கள் அங்கு எங்கள் டெப்போ பஸ் வரும். அதில் ஏற்றி விடுகிறோம் என்று சொன்னதால் சமாதனம் அடைந்து மீண்டும் ஏறினர். கரூர் சென்ற பின்னர் பயணிகளை கண்டக்டர் வேறு பஸ்சில் ஏற்றி விட்டார். பயணிகளின் திடீர் போராட்டத்தால் கொடுமுடியில் பரபரப்பு ஏற்பட்டது.
நன்றி மாலைமலர் 

8 அக்., 2012

மாயமே இந்த உலகம்...











பயணத்தின் நோக்கம் 
சேருமிடம்
பிறப்பின்  நோக்கம்
மரணமாகும்
இரண்டுக்கும் இடையில் 
நானா, நீயா போராட்டம்...

மனித ஒப்பனைக்குள் 
மறைந்த மதமும்

ஜாதிக்குள் 
ஜதிப்போட்டு நடனம் 

எல்லாமே சம்மதம் 
வெற்று   வார்த்தையாகும்
அடுத்த ஜாதி,மதத்தைப் 
பார்த்து வசைப்பாடும் 
மனம்...


மாயமே இந்த உலகம்

ஒருவருக்கு ஒருவர் 
நடிக்கும் நாடகம்...