30 ஜூன், 2013

காதலே சிறப்பு....











நேசிப்பு இருபக்கமும் 
இருந்தால் உகப்பு 
இல்லையென்றால் ஏனடா இறப்பு...?


தப்பு தப்பு நீ செய்வது தப்பு 
இழப்பு இழப்பு யாருக்கு யென்று 
பார்த்தால் புரியும் உனக்கு...!


காதல் தான் வாழ்க்கை யென்றால் 
ஏனடா உன் பிறப்பு 
திருமணம் ஆனவுடன் வரும் 
காதலே சிறப்பு....


படிப்பு படிப்பு 
யென்று தொடங்கு 
நீ படியேற அது தான் விளக்கு...


காதல் காதல் யென்று 
எழுதுவதை நிறுத்து 
உன்னை  நீ அறிந்து 
உன் காலத்தை நகர்த்து...

6 ஜூன், 2013

மணல் வீடு...















மணல்  வீட்டை..
அலைகள் அழித்து 
அழதது...
======================
ஒவ்வொரு மனிதனுக்கும் 
அழியாமல் இன்னும் 
மனதில்...
========================


19 மே, 2013

தீராத தீவிரவாதம்....










மனித  நேயம்  மறந்த 
மனிதர்கள் 
கையில் இருக்கும் 
ஆயுதம்...


பிடிவாதத்தின் மறு பெயர் 
தீவிரவாதம்...


ஆயுதம் விற்க 

அறிமுகம் ஆகிறது 
தீவிரவாதம்...

பிடித்தவர்கள் செய்தால் 

போர்க்களம் 
பிடிக்காதவர்கள் 
செய்தால் 
தீவிரவாதம்...

இந்த வாதமே 

உலகத்தின் குரலாய் 
ஒலிக்கிறது...

மெலிந்தவனுக்கு 
அவன் குரலே 
தீவீரவாதாமாய் 
ஆட்சியாளருக்கு...


தீவிர வாதத்தை 
ஆட்சியாளர்கள் 
எடுத்தால்
வாதமாய்...

பாதிக்கப்பட்டவன் 

எடுத்தால் 
அவன் வாழ்வே வதமாய்...






17 மே, 2013

அமிலத்தில் ஆடிய அனிச்சம்




சுமை தாங்கியாய்
பாலித்தீன் பைகள்...

போக்குவரத்து
சுமையை குறைக்க
எரி வாயு  வாகனங்கள்

வீட்டை அலங்கரிக்க
சாயங்கள்...
இருட்டை போக்க
அணு மின்நிலையங்கள்...

காதலிக்க
மறுத்தாலும்
தன்னை
வெறுத்தாலும்
அமிலத்தில்
வெந்தது முகங்கள்...

வாளரும் நாடுகளின்
நாடகத்தில்
நாமும் ஒரு அங்கங்கள்


இது தானோ
நமக்கு நாமே
தோண்டிய குழிகள்...


போதைச் சேற்றில் மனித நாற்றுகள்



கோயில் பக்கமும் 
பள்ளிகள் பக்கமும் 
அக்கம்பக்கமாய் 
டாஸ் மார்க் கடைகள்...

தடுமாறும் நடையில் 
நாளைய தலைமுறைகள் 
போதையோடு 
நிர்வாணமாய் 
முதிர்ந்த வயதினர்கள்...

தெளித்து விடப்பட்ட
போதை நீரில் 
வளரும் பயிர்கள் 
வாடிப்போக...

போலிகள் என்றாலும் 
சரி 
போதை வேண்டும் 
என்ற நெறி...

சிலர்  பூட்டு போடா 
போராட்ட்டம்...
இரவு நேரத்தில் 
போதையோடு 
நடமாட்டம்...

போதையோடு 
நகரும் நகரம்
நாடகமாய் போனது 
உலகம்...

தவறாய் போன நிலையில் 
மறக்க குடிகிறேன் 
போதை தேடி 
குடி மகன் சொன்னான் 
சிரித்தபடி...

குடலும் வெந்தப்படி 
குடிக்கும் குடி 
இவன் அறிந்த படி 
குடிக்கும் குடியடி 
இவனை என்ன 
சொல்லுவதடி...?