லேபிள்கள்
- அறிந்துக்கொளவோம்... (10)
- இன்றைய சுழலுக்கு கவிதை (191)
- கட்டுரைகள் (6)
- கவலை மறந்து ரசிக்க (1)
- கவிதைகள் (147)
- கவிதைகள் . (46)
- கவிதைகள் ... (8)
- கவிதைகள். (30)
- சமூகக்கவிதைகள் (159)
- சிரிக்க மட்டும் (183)
- சென்ரியூ-நகைப்பாக்கள். (1)
- தன்னம்பிக்கை கவிதை (41)
- திரைப்படம் ஒரு பார்வை... (11)
- தினசரி செய்திகள்... (184)
- துளிப்பாக்கள் (18)
- நகைசுவை கவிதைகள். (9)
- நினைவுகள் (33)
- பஞ்ச் டயலாக்.. (1)
- படக்கவிதைகள் (111)
- பழமொழிகள்... (2)
- பார்வைகள் (26)
- மருத்துவக் கவிதைகள் . (22)
- வாழ்த்துக்கவிதைகள் (10)
- ஹைக்கூ கவிதைகள் (61)
2 அக்., 2012
1 அக்., 2012
வாலாஜாவில் ஜீவனாம்சம் கேட்டு மகன்கள் மீது பெற்றோர் வழக்கு: 6 மகன்களும் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
ராணிபேட்டை, அக்.1-
வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 83) விவசாயி. இவரது மனைவி யசோதம்மாள் (75). இவர்கள் இருவரும் வாலாஜா ஜே.எம்.1 கோர்ட்டில் தங்களது மகன்கள் மீது ஜீவனாம்ச வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்களுக்கு அசோகன், கிருஷ்ணமூர்த்தி, ரங்கநாதன், தயாளன், வேல்முருகன், வரதராஜன் என 6 மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்ததுடன், ஒவ்வொரு மகனுக்கும் தலா ரூ.30 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை சரிசமமாக பிரித்து 2008ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ம் தேதி கொடுத்து விட்டோம்.
இவர்கள் 6 பேரும் திருப்பாற்கடலில் தனித்தனியாக வசதியாக வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொருவரும் மாதம் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் சம்பாதிக்கின்றனர். கஷ்டப்பட்டு 6 பிள்ளைகளையும் படிக்க வைத்துநல்ல நிலைக்கு அவர்களை உருவாக்கி, சொத்துக்களுடன் வாழ வழிவகை செய்துள்ளோம். ஆனால், பெற்றோரான எங்களை சாப்பாட்டுக்கே வழியின்றி அனாதையாக்கி விட்டனர். எனவே, எங்களுக்கு மாதம் தோறும் ஆகும் மருத்துவச்செலவு, உணவு மற்றும் இதர செலவுகளுக்காக ஒவ்வொருவரும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ஜீவனாம்சமாக வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
இந்த வழக்கை மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் ஸ்ரீதரன் ஆஜராகி தாக்கல் செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட வாலாஜா பேட்டை ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் (பொறுப்பு) அனுசுயா, இந்த வழக்கு தொடர்பாக 6 மகன்களையும் வரும் அக்.5ம் தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 83) விவசாயி. இவரது மனைவி யசோதம்மாள் (75). இவர்கள் இருவரும் வாலாஜா ஜே.எம்.1 கோர்ட்டில் தங்களது மகன்கள் மீது ஜீவனாம்ச வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்களுக்கு அசோகன், கிருஷ்ணமூர்த்தி, ரங்கநாதன், தயாளன், வேல்முருகன், வரதராஜன் என 6 மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்ததுடன், ஒவ்வொரு மகனுக்கும் தலா ரூ.30 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை சரிசமமாக பிரித்து 2008ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ம் தேதி கொடுத்து விட்டோம்.
இவர்கள் 6 பேரும் திருப்பாற்கடலில் தனித்தனியாக வசதியாக வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொருவரும் மாதம் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் சம்பாதிக்கின்றனர். கஷ்டப்பட்டு 6 பிள்ளைகளையும் படிக்க வைத்துநல்ல நிலைக்கு அவர்களை உருவாக்கி, சொத்துக்களுடன் வாழ வழிவகை செய்துள்ளோம். ஆனால், பெற்றோரான எங்களை சாப்பாட்டுக்கே வழியின்றி அனாதையாக்கி விட்டனர். எனவே, எங்களுக்கு மாதம் தோறும் ஆகும் மருத்துவச்செலவு, உணவு மற்றும் இதர செலவுகளுக்காக ஒவ்வொருவரும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ஜீவனாம்சமாக வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
இந்த வழக்கை மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் ஸ்ரீதரன் ஆஜராகி தாக்கல் செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட வாலாஜா பேட்டை ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் (பொறுப்பு) அனுசுயா, இந்த வழக்கு தொடர்பாக 6 மகன்களையும் வரும் அக்.5ம் தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.
நன்றி மாலைமலர்
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மேலும் ஒரு வழக்கில் கைது
ஓசூர்,அக்.1-
பெரியார். தி.க. பிரமுகர் பழனி கொலை வழக்கில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன்,அவரது அண்ணன் வரதராஜன், மாமனார் லகுமய்யா உள்ளிட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் அனுமதி இல்லாமல் கிரானைட் வெட்டி எடுத்த வழக்கு, அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து தாக்கிய வழக்கு உள்பட அடுத்தடுத்து பல வழக்குகள் ராமச்சந்திரன். வரதராஜன், லகுமய்யா ஆகியோர் மீது பாய்ந்தன. இதனால் இவர்கள் 3 பேரும் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இவர்கள் 3 பேர் மீதும் மேலும் ஒரு வழக்கு இன்று பதிவு செய்யப்பட்டது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் செயலாளரும், தற்போதைய அ.தி.மு.க. பிரமுகருமான நாகராஜரெட்டி என்பவர் கடந்த மே மாதம் 16-ந் தேதி தளி அருகே நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வீட்டுக்கு சென்று கொண்டு இருந்த போது வழிமறித்து தாக்கப்பட்ட வழக்கில் இவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக ராமச்சந்திரன் உள்ளிட்ட 3 பேரும் இன்று காலை 10-25 மணிக்கு சேலம் மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தேன்கனிக் கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டனர். நாகராஜரெட்டி தாக்கப்பட்ட வழக்கில் ஏற்கனவே குட்டிநாகா, முனிராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெரியார். தி.க. பிரமுகர் பழனி கொலை வழக்கில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன்,அவரது அண்ணன் வரதராஜன், மாமனார் லகுமய்யா உள்ளிட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் அனுமதி இல்லாமல் கிரானைட் வெட்டி எடுத்த வழக்கு, அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து தாக்கிய வழக்கு உள்பட அடுத்தடுத்து பல வழக்குகள் ராமச்சந்திரன். வரதராஜன், லகுமய்யா ஆகியோர் மீது பாய்ந்தன. இதனால் இவர்கள் 3 பேரும் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இவர்கள் 3 பேர் மீதும் மேலும் ஒரு வழக்கு இன்று பதிவு செய்யப்பட்டது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் செயலாளரும், தற்போதைய அ.தி.மு.க. பிரமுகருமான நாகராஜரெட்டி என்பவர் கடந்த மே மாதம் 16-ந் தேதி தளி அருகே நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வீட்டுக்கு சென்று கொண்டு இருந்த போது வழிமறித்து தாக்கப்பட்ட வழக்கில் இவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக ராமச்சந்திரன் உள்ளிட்ட 3 பேரும் இன்று காலை 10-25 மணிக்கு சேலம் மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தேன்கனிக் கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டனர். நாகராஜரெட்டி தாக்கப்பட்ட வழக்கில் ஏற்கனவே குட்டிநாகா, முனிராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நன்றி மாலைமலர்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
