11 ஜூலை, 2015

உன் எண்ணம்...!



அன்பின் வடிவம் கேட்டனர் சிலர்உடனே எனக்கு தோன்றியதுதோழன்மையேஉன் எண்ணம்...!

உழைக்கும்

மனிதனின் நாக்கு!

பலரின் உள்ளம்
உருகுலைந்து
போக
அமிலத்தின் 
அவதாரமாய்
மனிதனின் நாக்கு!

குடைக்குள்

கடலும் கையளவு தான்...!

கற்றுக்கொள்ளும்
முதல் அனுபவத்தில்
பயம்...!
கற்று
கடந்தால்
கடலும் கையளவு தான்...!

கவலை இல்லை

திறந்து விடுகிறதே

மனதை பூட்டி வைத்தாலும்
உன் பார்வை ஒன்று போதும்
தானியங்கி போல
திறந்து விடுகிறதே...

படகு போல

உன் நிஜத்தை
துறந்து என்
வாழ்க்கை பயணத்தில்
பயணம் ஏது..
உன் எண்ண அலைகளில்
சிக்கி தவிக்கும்
படகு போல நான்

நட்பு...!

உறவுகளாய் பிறக்காமல் 
ஒன்று பட்ட 
உணர்வுகளால் 
பிணைக்கப்பட்ட 
உன்னத உறவாய் 
நட்பு...!

நேசத்தின் நிலை

விளையாட்டுக்கு கூட
விட்டு தாரத நிலை
பிடித்தவர்களின்
நேசத்தின் நிலை

பூங்காவனம்

நித்தமும்

உனக்கு தெரியுமா?
நித்தமும் 
நீ இல்லாத போது 
நாம் பேசி
சிரித்து 
நம்மை மறந்த
வரிகளில் தான்டா
நான் வாழ்கிறேன்...

வாழ்க்கை...

காயப்பட்ட இதயம்
சொன்னது
வாலிபத்தின்
தன் காதலை...!
வாழ்க்கைப்பட்ட
வாழ்வு சொன்னது
மகிழ்ச்சியாய்
வாழ்ந்த வாழ்க்கையை...!

இல்லை

7 ஜூலை, 2015

என்னை

தூரமாய் இருந்தாலும்
ஒரு ஓரமாய் நின்று
உன்னை பார்த்து வந்தேன்
கண்களுடன் 
இதழ் ஓரமாய்
குழி விழ
சிரித்து விட்டு போகிறாய்
என்னை
உனக்குள் வைத்துக்கொண்டு...

நீ

எண்ணத்தில் நீ
எண்ணமெல்லாம் நீ'
எண்ணிய போது வந்து போவதும் நீ

நாம் நாமாக

கவலையை நீ 
உடுத்துவது இல்லை 
அது உன் வேலையும் இல்லை 
உனக்குள் நான் 
எனக்குள் நீ என்பதை விட
நமக்குள் நாம் என்ற
உண்மையில் இருப்பதால்
ஒருமையில் வாழ்வதால்
நாம் நாமாக இருக்கிறோம்...!

நிலைத்து இருக்கு..

தடுமாறும் 
தடமாறும் 
மனதில் 
உன் அன்பு மட்டும் 
எப்படி 
இன்னும் அப்படியே
நிலைத்து இருக்கு...!

மகிமையை.

தொலைந்து போனேன்
உன் உறவு என்னும்
உணர்வுக்குள்
உணர்ந்து கொண்டேன்
உன் உறவின் வலிமையை
பாசத்தின் மகிமையை..!

ஏழைகளுக்கு

வான் நிலவு போலவே
எல்லாம்
எட்டாக்கனியாய் 
ஏழைகளுக்கு 
ஏழ்மையின் பார்வைகளுக்கு...!

அழகாய் ...!

சீ என்ற வார்த்தை 
கூட
உன் வெட்கத்தின் 
ஒலி ஒளியில் 
அழகாய் ...!

எல்லாமே

நினைக்கும் போதும் 
பார்க்கும் போதும்
நமக்கு பிடித்தவர்களின் 
ம்ம்ம் என்ற சொல்லும் 
நடை 
உடை
எல்லாமே அழகாய் இருக்கும்...!

முகத்தை நீ காட்டு...

தேடும் நிலையில் நான் 
மறைந்த நிலையில் நீ ...
ஏனடி இந்த விளையாட்டு 
மறைந்த நிலையில்
மறைத்த உன் 
முகத்தை நீ காட்டு

ஆசை சொல்லா...

உன் எண்ணத்தை
சொல்லாமல் சொல்லும்
ம்ம்ம் என்னும்
உன் ஒரு சொல்லை
ஆசை சொல்லா
இல்லை
ஆச்சிரிய சொல்லா?
ம்ம்ம்ம் எப்படி எடுத்துக்கொள்வது

5 ஜூலை, 2015

ஒரு வரி கவிதையாய்...!

கவிதை எழுத நினைத்து
மனதுக்குள் வாசித்து பார்த்தேன் 
உன் வாசமே மீண்டும் வந்தது
உன் பெயரையே எழுதிவிட்டேன்
ஒரு வரி கவிதையாய்...!

நட்பால்..

அன்பால்
அதன் ஈர்ப்பால்
நட்பால்
ஆண்பால் 
பெண்பால்
ஒன்றாகி போனது..!

காந்தப் பார்வையாடா..

என் வெட்கத்தை 
வேட்டையாடியது 
உன் காந்தப் பார்வையாடா..

நேசம்...!

தரம் பார்த்து வரும் 
நேசம் 
நேசமே இல்லை ...!
வரமாய் கொள்ளுவதே
நேசம்...!

அன்புக்கு மரணம் ஏது..

சுவாசமும் 
நேசமாய் இருந்தால் 
அன்பானவர்களின் 
அன்புக்கு மரணம் ஏது..

முயற்சி

கழிக்கப்பட்ட விளையாட்டு...!

இனி உட்கார்ந்த நிலையில்
விளையாட்டு
ஏன் ஓடி விளையாடு
பாட்டு...
கணினி காலத்தில்
கழிக்கப்பட்ட
விளையாட்டு...!

நீ வாசித்த

இழக்காதே...!

நாளை நாளை 
என சொல்லியே
இந்த நாளை இழக்காதே...!

பாசக்கார திருடி நீ

என் உள்ளதை
எடுத்ததே நீ தான்
என்பதை
அறியாமலா இருப்பேன் நான்...
என்னையே
எடுத்து சென்ற
பாசக்கார
திருடி நீ தான் என
உணராமலா இருப்பேன் ...

சிரித்து விட்டு போகிறாய்

தூரமாய் இருந்தாலும்
ஒரு ஓரமாய் நின்று
உன்னை பார்த்து வந்தேன்
கண்களுடன் 
இதழ் ஓரமாய்
குழி விழ
சிரித்து விட்டு போகிறாய்
என்னை
உனக்குள் வைத்துக்கொண்டு...

நீ..


எண்ணத்தில் நீ
எண்ணமெல்லாம் நீ

எண்ணிய போது வந்து போவதும் நீ