25 டிச., 2014

நட்பூ வாசம்..!

ஒரே சொல்
அன்பு கொள்
தோள் சாய்ந்து
வேதனை கொல்.

ஏனெனில்
வேசம் கடந்த
மனதுக்குள் பாசம்
நேசம் காட்டும்
நட்பூ வாசம்..!


நட்பு...!

நிறம் 
மதம் 
பார்த்து வருவது
நட்பு அல்ல
அகம் மலர்ந்து
முகம் சிரித்து
ஏற்பதே
நட்பு...!

முகநூல் சொந்தம் ...!!

பார்த்தாலும் 
பாக்காமல் இருந்தாலும்
தொடரும் பந்தம் 
முகநூல் சொந்தம் ...!

அகதி என்று...!

எல்லையை கடந்தேன்
என் உயிர் காக்க
அடைத்து வைத்து
சொன்னர்கள்
அகதி என்று...!

நீ அறிய...

மெளனத்துக்கும்
கரை உடைக்கும்
வீரமுண்டு..
நீ பேசும் போது
தனிந்து போனது
பயந்து அல்ல
உன்னை நீ அறிய...

நீ வந்த கனவு..!










நிலவு ஒன்று
என் அருகில் வந்து
சிரித்து விட்டு கடந்தது...!
உறக்கம் கலைந்து 
தவிக்கவிட்டு போனது
நீ வந்த கனவு..!

22 டிச., 2014

களவு..

விழித்து பார்த்த 
பா(ர்)வைக்கு 
ஒழித்து வைக்க 
தெரியவில்லை..

சிரித்து போனது
நிலவு
களவு போனது
மனது..!

இரும்பும் மெழுகாய்...

தடை போட்ட போது
இடை பட்ட நேரத்தில்
இடை படும்போது 
இரும்பும் மெழுகாய்...

21 டிச., 2014

அழிவை அறிந்தாலும்.

தனக்குள்
பின்னிய வலையில்
சிலந்தி....!
ஜாதி 
மதம்
மொழிகள்
கடந்து
பின்னிய வலையில்
காதல்...!
அழிவை அறிந்தாலும்..\

மயக்கும்..

இடையினம்
தந்த வல்லினம்
மயக்கும் மெல்லினம்.


சுகம் .

காலை பொழுது
பத்திரிகை
காபி
நட்புடன் 
கதைப்பது
சுகம் .

மறுகனம்

திறக்கும் மனம்
உள்ளது 
உள்ளபடி
நட்பை பார்த்த
மறுகனம்

நட்பின் சிறப்பு...!

சங்கடமான வேளையில்
சந்தோஷம் தருவது
நட்பின் சிறப்பு...!

நட்பே துடுப்பு..!

விருப்பு 
வெறுப்புக்கு
இடைப்பட்டு 
விடுப்பு 
இல்லாத வாழ்வுக்கு
நட்பே துடுப்பு..!

16 டிச., 2014

காதல்...!

என் பாலைவன
இதயத்தில் 
சோலைவனமாய் நீ...!
=================
என் இதயக்குளத்தில்
அடிக்கடி 
நீராடி போனவள் நீயா?
==================
இதயங்கள் விற்பனைக்கு
விருப்பமுள்ளவர்கள் 
விண்ணமிக்கலாம்
இப்படிக்கு காதல்..!
===================
அடித்து போட்டாலும்
சாதி மதம் பேசி 
தடுத்துப்பார்த்தாலும்
முளைத்து விடுகிறது
காதல்...!
==================

கேள்வி...

ஆயுதமே இல்லாமல்
கொல்லும் 
சின்ன சிரிப்பும்
ஓர பார்வைகளும்
பாவைகளுக்கு 
யார் சொல்லி கொடுத்தா..?


14 டிச., 2014

ஆயுதம் பரிசு...!


அன்னியரிடம் 
அகிம்சை பேசிவருக்கு 
சுந்திர இந்தியாவில்
ஆயுதம் பரிசு...!

எனக்கு...

வலிகள் வரும் போது
விடியல் வேண்டாம்
தலையை வருடும்
உன் விரல்கள் போதும் 
எனக்கு...!


மழை..


13 டிச., 2014

அவதாரம் ..!



மரித்தாலும்
புல்லாய்
அவதாரம் ..!
============
முடங்கி போகவில்லை
உன் முந்தானையில்
இளைப்பாறுகிறேன்...
============

உன் வழி நடக்க...

உன் விழி நீரும்
ஆனந்தமாய்
அணிவகுக்க...
விழி நிலவே
நான்
உன் வழி நடக்க
வகை செய்..!

தந்த போதிலும்...!

நித்திரை சிறைப்பட்டது
விழித்திரை
திறக்கப்பட்டது..!
உன் வருகை 
கனவு என
விடை சொன்னது..
இருந்தால் என்ன
வந்தது நீ என்பதால்
கனவாய் போனாலும்
மனமும் மகிழ்ச்சியில்
தூக்கம் துக்கம்
தந்த போதிலும்...!

மறக்கும்..

உண்மை நட்பை
கொள்ளும் உள்ளம்
உன் நட்பை கொல் என 
சொல்லுகிறதே...
சொல்லும்
செயலும் மாறினால்
நட்பும் மாறும்
மறக்கும்..

நீ இன்னும்...!

இன்னும் எத்தனை
நாள்
இந்
இதயத்திரையில்...!
காத்திற்கும்
காலமெல்லாம்
காதலாய் 
இன்னும் எத்தனை 
நாள்
இந்த போரட்டம்..?
முடிவு அறியா
நெடுந் தொடராய்
இதயத்திரையில்...!
காத்திற்கும்
காலமெல்லாம்
காதலாய்
காற்றாய்
கவிதையாய்
என்னோடு
உணர்வோடு
கலந்தவளாய்
நீ இன்னும்...!
காற்றாய் 

கவிதையாய்
என்னோடு
உணர்வோடு
கலந்தவளாய்
நீ இன்னும்...!

கொல்கிறது...!

உன்னை பார்த்த பின்
விட்டு விட்ட இடத்திலிருந்து
தொடர நினைத்து...
காலங்கள் ஒடினாலும்
கண்ணை மூடினால்
மனக்கண்ணில் உன்
புதிய முகம் கொல்கிறது...!

மறைக்க முடியாது...!

வார்த்தைகள்
தான் வாழ்க்கைக்கு
அவசியம்...
சிந்தும் வார்த்தைகள்
திசை மாறி போனால்
நேசம் மாறி போகும்
மனம் வாடிப்போகும்...!
உடைக்கப்பட்ட
கண்ணாடிப்போல்
சேரமுடியாது
ஒட்டி வைத்து பார்த்தாலும்
உடைத்ததை மறைக்க முடியாது...!

முதியோர் இல்லதில்

பாத்து போப்பா
மறக்காம 
அடுத்த மாதமும்
வந்து போ
முதியோர் இல்லதில்
அம்மா....

வாலிப கணக்கில்

வாலிப கணக்கில்
மிச்சமிருப்பது
உன் நினைவு ஒன்றுதான்..!

மலரோ..!

நேற்று வரை நீ 
யாரோ
இன்று
வாசம் தந்து 
பாசம் பேசும் 
மனதுக்குள் வளரும்
மலரோ..!

உன் கூந்தலில்

பூக்களின் 
கணகளுக்கு 
வில்லி நீ...!
==========
உன்னை பார்த்த பின்
பூக்களுடன் ஊடல்
தேனீ...!
===========
உனக்காக பூக்கள் எழுதிய
கவிதை உன் கூந்தலில்
அழகாய்..!